Regional02

வேல் நடை பயணத்துக்கு அனுமதி கேட்டு நாம் தமிழர் கட்சி வழக்கு திண்டுக்கல் எஸ்.பி. பதில் அளிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

திண்டுக்கல்லில் இருந்து பழனிக்கு வேல் நடை பயணம் செல்ல அனுமதி கோரி நாம் தமிழர் கட்சி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் பழநி மண்டலச் செயலர் காஜா, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

நாம் தமிழர் கட்சி சார்பில் நவ.21-ல் திண்டுக்கல் மாவட்ட புறவழிச் சாலையில் இருந்து, மயில் ரவுண்டானா வழியாக பழநி கோயிலுக்கு வேல் நடை பயணம் செல்ல அனுமதி கோரி போலீஸாரிடம் நவ.5-ல் மனு கொடுத்தோம். ஆனால் கரோனா ஊரடங்கை காரணமாகக் கூறி அனுமதி வழங்க போலீஸார் மறுத்துவிட்டனர். இந்த உத்தரவை ரத்து செய்து நவ.21-ல் வேல் நடை பயணத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி நிஷாபானு விசாரித்து, திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்தார்.

SCROLL FOR NEXT