Regional01

இன்று முதல் 12 நாட்களுக்கு பாசனத்துக்காக குப்பநத்தம் அணை திறப்பு முதல்வர் பழனிசாமி உத்தரவு

செய்திப்பிரிவு

செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் அணையில் இருந்து இன்று முதல் 12 நாட்களுக்கு பாசனத்துக்காக தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே குப்பநத்தம் அணை உள்ளது. 60 அடி உயரம்உள்ள அணையின் நீர்மட்டம், தொடர் மழையால் நேற்று காலை நிலவரப்படி 46.09 அடியாக உள்ளது. 700 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டு அணை யில், 405.30 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 38.19 கனஅடி நீர் வருகிறது. அணைப் பகுதியில் 13.60 மி.மீ., மழை பெய்துள்ளது. அணைக்கு நீர்வரத்து உள்ளதால், அணையை திறக்க வேண்டும் என கடந்த 10 நாட்களுக்கு முன்பு, செங்கத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்று, இன்று (17-ம் தேதி) முதல் அணையை திறக்க முதல்வர் பழனிசாமி நேற்று உத்தரவிட்டார்.

இதுகுறித்து முதல்வர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் குப்பநத்தம் அணையில் இருந்து 2020-21-ம் ஆண்டு பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகளிடம் இருந்து எனக்கு கோரிக்கைகள் வந்தன.

நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்

SCROLL FOR NEXT