Regional01

கரூரிலிருந்து ஒடிசாவுக்கு 2,671 டன் கொசுவலை அனுப்பிவைப்பு

செய்திப்பிரிவு

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் கரூரிலிருந்து ஒடிசா மாநிலம் மஞ்சேஸ்வர் மற்றும் குர்டா சாலை, சம்பல்பூர் ஆகிய பகுதிகளுக்கு சரக்கு ரயில் பெட்டிகள் மூலம் அண்மையில் ரசாயன பூச்சுக்கொண்ட கொசுவலைகள் அனுப்பிவைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, கரூர் ரயில் நிலையத்திலிருந்து ஒடிசா மாநிலம் ஜனகர் சாலைக்கு 42 சரக்கு ரயில் பெட்டிகள் மூலம் 2,671 டன் கொசுவலை கடந்த 13-ம் தேதி அனுப்பிவைக்கப்பட்டது. இதன் மூலம் சேலம் கோட்ட ரயில்வேக்கு ரூ.45.09 லட்சம் வருவாய் கிட்டியுள்ளது என சேலம் கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT