Regional02

ஏரியில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

விழுப்புரம் அருகே சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகள் பவித்ரா (11). இவர் 6-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, அதே கிராமத்தில் உள்ள ஏரிக்குள் மேய்ந்து கொண்டிருந்த வாத்தைகரைக்கு ஓட்டும்போது நீரில் மூழ்கியுள்ளார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பினர். பவித் ராவை பரிசோதனை செய்த மருத் துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT