Regional01

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நகை திருடிய உறவினர் கைது

செய்திப்பிரிவு

வேலூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் தங்க நகைகள், ரூ.10 லட்சம் பணத்தை திருடிச்சென்ற உறவினரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.

வேலூர் வள்ளலார் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சந்திரன் (63). இவர், தனது மகள் திருமணத்துக்காக வீட்டில் தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை சேமித்து வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிக்கொண்டு சந்திரன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார்.

அப்போது, வீட்டில் இருந்த 3 கிலோ எடையுள்ள தங்க நகைகள், ரூ.10 லட்சம் பணம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் சந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சந்திரனின் உறவினரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புங்கனூர் பகுதியைச் சேர்ந்த மதிவாணன் (26) என்பவர் தங்க நகைகள், பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் மதிவாணனை கைது செய்து அவரிடம் இருந்து நகைகள், பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT