Regional02

வட மாநில உறவினர்கள் மோதலில் கழுத்தறுப்பு

செய்திப்பிரிவு

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பாரிக் நாயக் (54). இவரது மனைவியின் தம்பி பனிஜா நாயக் (40). இருவரும், திருப்பூர் மாவட்டம் கேத்தனூரில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு மனைவியுடன் பாரிக் நாயக் அலைபேசியில் பேசும்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாரிக் நாயக்கின் மனைவி அவரது சகோதரரிடம் தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து பனிஜா நாயக் தனது மைத்துனரிடம் கேட்டுள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், பாரிக் நாயக்கின் கழுத்தை அறுத்துவிட்டு பனிஜா நாயக் தப்பியோடினார்.

ஆபத்தான நிலையில் பாரிக் நாயக்கை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காம நாயக்கன்பாளையம் போலீஸார் வழக்குபதிவு செய்து, பனிஜா நாயக்கை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT