Regional02

தூத்துக்குடியில் தீபாவளி கூட்ட நெரிசலை கண்காணிக்க சிசிடிவி கேமராவுடன் ரோந்து வாகனம்

செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் சிசிடிவி கேமரா பொருத்திய ரோந்து வாகன கண்காணிப்பு பணியை எஸ்பி ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் கடந்த 2 நாட்களாக அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் வணிக நிறுவனங்களுக்குச் சென்று பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். ஜவுளிக் கடைகள், பட்டாசுக் கடைகள், நடைபாதை துணி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நகைப் பறிப்பு, பணம் பறிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்திய ரோந்து வாகன கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேமரா பொருத்திய வாகன ரோந்தை எஸ்.பி., ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

360 டிகிரி சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்ட 2 வாகனங்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த ரோந்து வாகனங்கள் கூட்டம் அதிகமான இடங்களில் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடும். அதுபோல நகரில் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 4 கண்காணிப்பு கோபுரங்களின் செயல்பாட்டையும் எஸ்பி தொடங்கி வைத்தார்.

SCROLL FOR NEXT