தமிழ்நாடு எஸ்.சி, எஸ்டி பிரிவு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்புச் செயலர் நாகூர்கனி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
அண்ணா பல்கலைக்கழகத்தில் செப்.30-ல் பேராசிரியர், உதவி பேராசி ரியர், நூலகர், உடற்கல்வி ஆசிரியர், உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பு விதிப்படி இல்லை. பல்வேறு குளறுபடிகள் உள் ளன. இதனால், மத்திய கல்வி நிறுவனச் சட்டப்படி எஸ்.சி, எஸ்டி. பிரிவில் அனைத்துப் பிரிவினரும் பயன்படும் வகையில் புதிய அறிவிப்பு வெளியிட்டு பணி நியமனங்களை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்து, அண்ணா பல்கலைக்கழகப் பணி நியமனங்கள் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது. மனு தொடர்பாக மத்திய மனிதவளத் துறை, மாநில உயர் கல்வித் துறைச் செயலர், அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டது.