திருப்பரங்குன்றம் ஒன்றியம் வலையங்குளத்தில் பெரும்பிடுகு முத்தரையர் சிலை அமைக்க அனுமதி பெற்றுத்தரக் கோரி அப்பகுதியை சேர்ந்த மக்கள் அதிமுக புறநகர் கிழக்கு மாவட்டச் செயலர் வி.வி. ராஜன் செல்லப்பாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். சிலை அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை ராஜன் செல்லப்பா ஆய்வு செய்தார். அவர் கூறுகையில், ‘‘பெரும்பிடுகு முத்தரையர் சிலை அமைக்க அரசிடம் நிச்சயம் அனுமதி பெற்றுத்தரப்படும்’’ என்றார்.