Regional01

பிஎஸ்என்எல் அலுவலகத்தில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்

செய்திப்பிரிவு

பிஎஸ்என்எல் மதுரை தொலை தொடர்பு பகுதியில் அக்.27 முதல் நவ.2 வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக் கப்பட்டது.

இந்த வருட கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தின் முக் கிய குறிக்கோளாக “விழிப் புணர்வு இந்தியா, வள மான இந்தியா” என்பதை வலி யுறுத்தி பிஎஸ்என்எல் அலு வலகங்களிலும், டெலிபோன் எக்ஸ்சேஞ்சுகளிலும் பதாகைகள் தொங்கவிடப்பட்டிருந்தன

முதன்மை பொது மேலாளர் அலுவலகத்திலும், கோட்ட அலுவலகங்களிலும் கண் காணிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது. மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் வெப்சைட் மூலமாக தல்லாகுளம், திண்டுக்கல், இராமநாதபுரம் வாடிக்கையாளர் மையத்திற்கு வரும் பொதுமக்களும் “ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி” ஏற்க வசதி செய்யப்பட்டது. பிஎஸ்என்எல் ஊழியர்கள் இணையதளத்திலும் தங்கள் உறுதிமொழியை பதிவு செய்தனர்.

கண்காணிப்பு விழிப்புணர்வு சிறப்பு கருத்தரங்கம் மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் நடந்தது. இதில் ஓய்வு பெற்ற ஜிஎஸ்டி மற்றும் கலால் துறை உதவி ஆணையர் சோம.நாகலி ங்கம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

SCROLL FOR NEXT