Regional02

திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் பிரச்சினைகள் தீரும் கலந்துரையாடல் கூட்டத்தில் கனிமொழி எம்பி உறுதி

செய்திப்பிரிவு

‘‘தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளும் தீரும்’’என்று தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி உறுதியளித்தார்.

வைகுண்டம் அணை தென்கால் பாசன விவசாயிகள், குரும்பூர் பகுதி விவசாயிகளின் கலந்துரையாடல் கூட்டத்தில்தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்பி கனிமொழி கலந்துகொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, வைகுண்டம் அணையில் இருந்து கடம்பாகுளத்துக்கு தடையின்றி தண்ணீர் வர ஏற்பாடு செய்ய வேண்டும். கடம்பாகுளத்தை தூர்வார வேண்டும். கடம்பாகுளம் உபரி நீரால் பயன்பெறும் 12 குளங்கள் மற்றும் 10 மடைகளை சரிசெய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதிலளித்து கனிமொழி எம்பி கூறும்போது, ‘‘தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி மலரும். அப்போது விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளும் தீரும். எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து விவசாயிகளுக்கு தேவையான பணிகளைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து வடகால் பாசனபகுதி விவசாயிகளுடன் மாலையில் கலந்துரையாடினார்.

முன்னதாக நேற்று காலைவைகுண்டம் அணைக்கு சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, ஆழ்வார்திருநகரி ஒன்றியக் குழு தலைவர் ஜனகர் , பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT