Regional01

மதுரை, விருதுநகரில் இரவு முழுவதும் பலத்த மழை விரகனூரில் 101.50 மி.மீ. பதிவானது

செய்திப்பிரிவு

மதுரை விரகனூரில் 101.50 மி.மீ. மழை பதிவானது.

மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன் தினம் இரவு முழுவதும் இடி, மின்னலுடன் பரவலாகப் பலத்த மழை பெய்தது. ஏறக்குறைய 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் நகரின் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மதுரை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று காலை 8 மணி வரை) பெய்த மழை அளவு (மி.மீ.ல்): விரகனூர்-101.50, விமான நிலையம்-81.10, திரு மங்கலம்-74.6, சோழவந்தான்-30, சிட்டம்பட்டி-28.2, ஆண்டி பட்டி-24.2, மேட்டுப்பட்டி-19, கள்ளந்திரி-20.60, வாடிப்பட்டி-11, பேரையூர்-2 மிமீ மழை பெய் துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை (மி.மீ.) அளவு வருமாறு: வத்திராயிருப்பு-65, சாத்தூர்-38, பிளவக்கல் பெரியாறு அணை-34.8, கோவிலாறு அணை-8.4, திருவில்லிபுத்தூர்-18, பிளவக் கல்-6, வெம்பக்கோட்டை அணை-5.8, சிவகாசி-4, காரியாபட்டி-3 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு, வெம்பக்கோட்டை, ஆனைக்குட்டம், குல்லூர்சந்தை, சாஸ்தா கோவில் ஆகிய அணை களில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் மழை இல்லை.

SCROLL FOR NEXT