மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, திருவாரூர் ரயில் நிலையம் முன்பு நேற்று காங்கிரஸ் கட்சியினர் ராட்டை மற்றும் ஏர் கலப்பையுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன் தலைமை வகித்தார். மன்னார்குடி நகரத் தலைவர் கனகவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மாசிலாமணி, மதிமுக கூடூர் சீனிவாசன், விசிக மாவட்டச் செயலாளர்கள் வடிவழகன், வி.த.செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூரில்...
கையெழுத்து இயக்கம்
கரூரில்...