Regional04

வருவாய் துறையினர் போராட்டம்

செய்திப்பிரிவு

பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை (குரூப் 2) நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் நாகேந்திர முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வினோத்குமார் முன்னிலை வகித்தார்.

மாநிலப் பொதுச் செயலாளர் தர்மராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில் திருத்திய வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் பட்டியல் வெளியிட்டு, பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். துணைத் தலைவர் கமரூதீன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT