வதோதரா தொகுதியில் அபார வெற்றி பெற்ற பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 22,374 வாக்குகளில் தேர்தல் சாதனையைத் தவறவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் சரித்திரத்தில், ராம்விலாஸ் பாஸ்வான், சிபிஎம் கட்சியின் அனில் பாசுவுக்கு அடுத்தபடியாக மோடி அதிகபட்ச வாக்குகள வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளராகத் திகழ்கிறார்.
5 லட்சம் வாக்குகளுக்கும் அதிகமான வித்தியாசத்தில் வென்ற 3வது வேட்பாளர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சிபிஎம். வேட்பாளர் அனில் பாசு மேற்குவங்கத்தின் ஆரம்பாக் தொகுதியில் 2004ஆம் ஆண்டு தேர்தலில் 5,92,502 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே இந்திய சாதனையாக இருந்து வருகிறது.
இந்தத் தேர்தலில் நரேந்திர மொடி வதோதராவில் 8,45,464 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 2,75,336 வாக்குகளையே பெற்றுள்ளார். மோடி 5,70,128 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். ஆனால் அனில் பாசுவின் வெற்றிக்கும் மோடியின் வெற்றிக்கும் இடையிலான வித்தியாசம் சுமார் 22,374 வாக்குகள்.
ஆகவே 1989ஆம் ஆண்டு தேர்தலில் பாஸ்வான், 2004ஆம் ஆண்டு தேர்தலில் அவரை முறியடித்த சிபிஎம்-இன் அனில் பாசு, தற்போது மோடி அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளராக திகழகிறார்.