தர்மபுரி

திரும்பிப் பார்போம்

செய்திப்பிரிவு

சங்க காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட தருமபுரியை அதியமான் நெடுமான் அஞ்சி ஆண்டுள்ளார். இவர் மரபில் ஐந்து மன்னர்கள் தருமபுரி பகுதியை ஆண்டுள்ளனர். ஆங்கிலேயர் வசம் இந்தப் பகுதி செல்லும் முன்பு விஜயநகர ஆட்சியில் இந்தப் பகுதி இருந்தது. 1964-ம் ஆண்டு தருமபுரி நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது.

1965-ம் ஆண்டு ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரி தனி மாவட்டமாக உதயமானது. சுதந்திரப் போராட்டத் தியாகி சுப்ரமணிய சிவாவின் நினைவிடம் மற்றும் மணிமண்டபம் தருமபுரி அருகே பாப்பாரப்பட்டியில் உள்ளது.

SCROLL FOR NEXT