இதர மாநிலங்கள்

தேர்தல் களம் 2019: தாத்ரா நாகர் ஹவேலி

நெல்லை ஜெனா

இந்தியாவில் சில பகுதிகளைப் பிடித்திருந்த போச்சுகீசியர்களும் மராட்டிய மன்னர்களும் அடிக்கடி சிறுசிறு சண்டைகள் போட்டுக் கொண்டிருந்த காலம். அதை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அப்போதைய மராட்டிய அரசு தங்கள் ஆளுகைக்குட்பட்ட 72 கிராமங்களை போர்ச்சுகீசியர்களுக்கு நன்கொடையாக அளித்தனர். இதற்கான ஒப்பந்தம் 1799-ம் ஆண்டில் போடப்பட்டது.

அப்படிக் கொடுக்கப்பட்ட கிராமங்களின் கூட்டம்தான் இன்றைய இந்தியாவின் ஒரு யூனியன் பிரதேசமான தாத்ரா - நாகர்ஹவேலி.

# குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையே இந்த யூனியன் பிரதேசம் அமைந்துள்ளது. ஆங்கிலேயர்களிடம் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் வெளியேறாமல் போர்ச்சுக்கீசியர்கள் அடம் பிடித்தார்கள்.

1954-ம் ஆண்டில், இப்பகுதி மக்களே புரட்சி செய்து அவர்களை வெளியேற்றினார்கள். இதையடுத்து 1961-ம் ஆண்டில் இந்தியாவுடன் இணைந்தன இப்பகுதிகள்.

2014- மக்களவை தேர்தல்

கட்சி

தொகுதிகள் (1)

வாக்கு சதவீதம்

பாஜக

1

48.9

காங்கிரஸ்

0

45.1

SCROLL FOR NEXT