சவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: மெக்கா புனித யாத்ரீகர்கள் 20 பேர் பலி

By செய்திப்பிரிவு

மெக்கா: சவுதி அரேபியாவில் உள்ள புனித தலமான மெக்காவுக்கு சென்ற யாத்ரீகர்கள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ சவுதியில் அகபா ஷார் பகுதியில் இருந்து புனித தலமான மெக்காவுக்கு சென்ற யாத்ரீகர்கள் பேருந்து விபத்துக்குள்ளானது. அப்போது பேருந்து தீப்பிடித்து ஏறிந்தது. இதில் 20 பேர் பலியாகினர். விபத்தில் 29 -க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர்.

உயிரிழந்தவர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். விபத்துக்கான காரணத்தை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவதி அரேபியாவின் புனிதத் தலங்களைச் சுற்றியுள்ள சாலைகள் சற்று ஆபத்தானவையாகவே உள்ளன. குறிப்பாக ஹஜ் பயணத்தின்போது, ​​ அதிகப்படியான பேருந்துகள் இடைவிடாத போக்குவரத்து நெரிசலை உருவாக்கும் போது ஓட்டுநருக்கு சாலைகள் குழப்பமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுவே சாலை விபத்துக்கான காரணம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த அக்டோபர் 2019 -ல், மதீனா அருகே மற்றொரு கனரக வாகனத்துடன் பேருந்து மோதியதில் சுமார் 35 வெளிநாட்டினர் பலியாகினர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்