ஏவுகணை தாக்குதலில் 600 ராணுவ வீரர்களை கொன்றோம்: ரஷ்யா அறிவிப்பு; உக்ரைன் மறுப்பு

By செய்திப்பிரிவு

கீவ்: தங்கள் ராணுவம் நடத்திய தாக்குதலில் உக்ரைனின் 600 ராணுவ வீரர்கள் பலியாகினர் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைனின் கிழக்கு நகரமான கிராமடோர்ஸ்கில் தங்கள் ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 600க்கும் மேற்பட்ட உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களது ஆயுதமும் அழிக்கப்பட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. புத்தாண்டு தினத்தில் ரஷ்யாவின் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் உக்ரைனால் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் ரஷ்யாவின் இந்த அறிவிப்பை உக்ரைன் மறுத்துள்ளது. இது ரஷ்யாவின் வழக்கமான பிரச்சாரம் என்று உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக ரஷ்யாவில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் போர் நிறுத்த அறிவிப்பை அதிபர் புதின் வெளியிட்டார். ஆனால் இது ரஷ்யாவின் ஏமாற்று வேலை என உக்ரைன் கூறியது. ரஷ்யாவின் போர் நிறுத்தத்தை ஏற்கவில்லை என்றும் உக்ரைன் தெரிவித்தது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் புதினை விமர்சித்தார். இந்தச் சூழலில் உக்ரைன் படைகள் 600 பேரை ஏவுகணை தாக்குதலில் கொன்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் முடிவெடுத்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளுடனும் உக்ரைன் நெருக்கம் காட்டியது. இந்த நடவடிக்கைகளால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தொடர்ந்து உக்ரைன் - ரஷ்யா போர் நடைபெற்று வருகிறது. போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

24 mins ago

தமிழகம்

29 mins ago

சுற்றுலா

46 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

உலகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்