லண்டன்: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசெபத் மறைவை அடுத்து, அந்நாட்டு மன்னராக சார்லஸ் நாளை முறைப்படி அறிவிக்கப்பட இருக்கிறார். அதற்கு முன்னதாக இங்கிலாந்து மக்களுக்கு உரையாற்றினார். அதில், ராணி இரண்டாம் எலிசெபத் குறித்து உருக்கமாக பேசினார்.
தனது முதல் உரையில், "ஆழ்ந்த துக்கத்துடன் இன்று நான் உங்களிடம் பேசுகிறேன். மதிப்புக்குரிய ராணியும் என் அன்புக்குரிய தாயான இரண்டாம் எலிசெபத் எனக்கும் எனது குடும்பத்துக்கும் ஒரு உத்வேகமாகவும் முன்மாதிரியாகவும் இருந்தார். அவர் எங்கள்மீது செலுத்திய அன்பு, பாசம், வழிகாட்டுதலூக்காக அவருக்கு நிறைய கடன்பட்டுள்ளோம். ராணி எலிசபெத், தனது வாழ்நாள் முழுவதும் உத்வேகம் மிகுந்து இருந்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றினார். அவர் மறைந்தது மிகப்பெரிய துயர்.
ராணியின் அதே வழியில் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு சேவை செய்வேன் என்ற வாக்குறுதியை இன்று உங்கள் அனைவருக்கும் அளிக்கிறேன். ராணி தனது சேவையை அர்ப்பணிப்புடன் செய்தது போல், நானும் அரசியலமைப்புக்கு எனது அர்ப்பணிப்பை வழங்குவேன் என்பதை உறுதியளிக்கிறேன். விசுவாசத்துடனும் அன்புடனும் மக்களுக்கு சேவை செய்ய முயற்சிப்பேன்.
என் அன்புக்குரிய மம்மா (அம்மா), மறைந்த எனது தந்தையுடன் சேருவதற்காக செல்லும் உங்களின் இந்த கடைசிப் பயணத்தைத் தொடங்கும்போது, நான் இதைச் சொல்ல விரும்புகிறேன். நமது குடும்பம் மற்றும் நாட்டின் மக்களுக்காக நீங்கள் காட்டிய அன்பு அனைத்துக்கும் நன்றி. இத்தனை ஆண்டுகளாக நீங்கள் மிகவும் விடாமுயற்சியுடன் சேவை செய்தீர்கள். தேவதூதர்களின் விமானங்கள் உங்களின் ஓய்வுக்கு பாடட்டும்." என்று உருக்கமாக பேசியுள்ளார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
58 secs ago
சினிமா
5 mins ago
சினிமா
10 mins ago
இந்தியா
18 mins ago
க்ரைம்
15 mins ago
இந்தியா
21 mins ago
தமிழகம்
43 mins ago
இந்தியா
50 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago