ஈரானில் கரோனா பலி எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை கூறும்போது, ''ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 21,026 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 496 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஈரானில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுவரை ஈரானில் 24,17,230 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் கரோனா பரவல் தீவிரமாக உள்ளதால் அதனைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தடுப்பூசிகள் செலுத்தும் பணியையும் அதிகரித்துள்ளது.
உலக அளவில் கரோனா பாதிப்பால் அதிக பலி ஏற்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
உலகம் முழுவதும் 14 கோடிக்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
உலகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
8 hours ago
சினிமா
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago