ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு துண்டு பிரசுரங்கள் மூலம் எச்சரிக்கை

By ஏபி

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளை எச்சரிக்கும் விதமாக ஹெலிகாப்டர் மூலம் துண்டுப் பிரசுரங்களை, அந்நாட்டு அரசு விநியோகம் செய்துள்ளது.

"உங்களது நிலையை நீங்களே மோசமாக்கிக் கொள்ள வேண்டாம்" என்று அதில் எழுதப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு எதிராக ஆளும் பஷர் அல் ஆசாத் படைகளுக்கு ஆதரவாகவும் ரஷ்யப் படைகள் அங்கு களம் இறங்கியிருக்கும் நிலையில், தீவிரவாதிகளுக்கு முதல் முறையாக இத்தகைய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாக்குப் பைகளில் நிரப்பப்பட்ட பல ஆயிரம் துண்டுப் பிரசுரங்கள் ஹெலிகாப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த ரஸ்தான் மற்றும் தைபிஷே ஆகிய பகுதியில் வீசப்பட்டன.

மேலும், இந்தப் பகுதிகளில் ஏற்கெனவே ரஷ்யப் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருவதாகவும், மேற்பட்ட தாக்குதல்கள் திட்டமிடப்பட்டுள்ளதால் தீவிரவாதிகள் திரும்பி செல்லும்படியும் சிரிய அரசு சார்பில் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE