மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு: குழந்தை உட்பட 13 பேர் பலி

மெக்சிகோவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு குழந்தை உட்பட 13 பேர் பலியாகினர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ மெக்சிகோவில் வேராகர்ஸ் மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குடும்ப விழா ஒன்றில் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் ஒரு குழந்தை உட்பட 13 பேர் பலியாகினர். பலியானவர்களில் 5 பெண்கள், 7 ஆண்கள் அடக்கம்.

பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

வேராகர்ஸ் மாகாணத்தில் இரண்டு போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படும். எனவே இதன் பின்னணியா என்று விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE