நாய் இறைச்சிக்கு தடை விதிக்கும் மசோதா: தென்கொரிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

By செய்திப்பிரிவு

சியோல்: தென்கொரியாவில் நாய்களை உணவுக்காக கொல்லும் நடைமுறை உள்ளது. நாய் இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், நாய் இறைச்சிக்கு தடை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா தென்கொரிய நாடாளுமன்றத்தில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்படி, நாய் இறைச்சி விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். உணவுக்காக நாயை கொன்றால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 23,000 டாலர் (ரூ.19 லட்சம்) வரை அபராதமும் விதிக்கப்படும். நாய் இறைச்சி விநியோகம் செய்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் 15,000 டாலர் அபராதமும் விதிக்கப்படும்.

எனினும், இந்தச் சட்டம் 2027-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ளது. நாய் இறைச்சி விற்பனையில் ஈடுபடுபவர்கள் வேறு வேலைக்கு மாறுவதற்காக 3 ஆண்டு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

இந்தியா

25 mins ago

தமிழகம்

11 mins ago

சினிமா

36 mins ago

இணைப்பிதழ்கள்

37 mins ago

வணிகம்

22 mins ago

தமிழகம்

42 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

மாவட்டங்கள்

55 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்