புதுடெல்லி: அமெரிக்காவில் உள்ள பிஇடபிள்யூ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வு விவரங்கள் வெளியிடப்பட்டன. அதில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவுக்குள் பல்வேறு நாட்டவர் சட்டவிரோதமாக குடியேறுவது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் 3-வது இடத்தில் இந்தியர்கள் உள்ளனர்.
கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2023-ம் ஆண்டு செப்டம்பர் வரை 96,917 இந்தியர்கள் சரியான ஆவணங்களின்றி அமெரிக்காவில் குடியேறியுள்ளனர்.
2019 முதல் 2020-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை ஒப்பிடும்போது இது 5 மடங்கு அதிகமாகும். அந்த ஆண்டில் 19,883 இந்தியர்கள் மட்டுமே சட்டவிரோதமாகக் குடியேறினர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களில் முதல்இடத்தில் மெக்சிகோ நாட்டவர் உள்ளனர். 2017 முதல் 2021-ம் ஆண்டு வரை 9 லட்சம் மெக்சிகோ நாட்டவர், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர்.
அதற்கடுத்து 2-வது இடத்தில் எல் சால்வடார் நாட்டைச் சேர்ந்த 8 லட்சம் பேர், அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். 3-வது இடத்தில் இந்தியர்கள் (7.25 லட்சம்)உள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 min ago
க்ரைம்
8 mins ago
உலகம்
12 mins ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
வெற்றிக் கொடி
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago