இன்று என்ன? - கண் மூடி எழுதிய அறிஞர்

By செய்திப்பிரிவு

தமிழக அரசின் திரு.வி.க. விருது பெற்றவர் இரா.இளங்குமரனார். நெல்லை மாவட்டம் வாழவந்தாள்புரம் கிராமத்தில் பிறந்தார். சங்கரன்கோவில் கரிவலம்வந்தநல்லூர் பள்ளியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது.

புலவர் படிப்புக்கான தேர்வு எழுதி, 1951-ல் சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றார். அதுவரை முழுமையாக கிடைக்கப்பெறாத குண்டலகேசி காப்பியத்தை தனது கற்பனையில் விரித்து எழுதி முடித்தார். அந்நூலினை 1958-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார். 1963-ல் எழுதிய திருக்குறள் கட்டுரை தொகுப்பு நூலை பிரதமர் நேரு வெளியிட்டார்.

காரைக்குடியில், சங்க இலக்கிய நூல்களைத் தொகுத்தபோது புறநானூற்றை எளிய தமிழில் 2003-ல் வெளியிட்டார். திருச்சியில் திருவள்ளுவர் தவச்சாலையில் 45,000 நூல்கள் கொண்ட நூலகத்தை நடத்தினார்.

பிற்காலத்தில் அதில் 40 ஆயிரம் நூல்களை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்துக்கு நன்கொடையாக வழங்கினார். கண்பார்வை பறிபோய்விட்டால் எழுத்துப் பணி பாதிக்கப்பட்டுவிடும் என்பதற்காக கண்களை மூடியே எழுதும் திறனை வளர்த்துக்கொண்டார். 1978-ல்நல்லாசிரியர் விருது பெற்ற இவர் 2021 ஜூலை 25-ம் தேதி காலமானார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 mins ago

விளையாட்டு

15 mins ago

விளையாட்டு

18 mins ago

விளையாட்டு

31 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

56 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்