தமிழக அரசின் திரு.வி.க. விருது பெற்றவர் இரா.இளங்குமரனார். நெல்லை மாவட்டம் வாழவந்தாள்புரம் கிராமத்தில் பிறந்தார். சங்கரன்கோவில் கரிவலம்வந்தநல்லூர் பள்ளியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது.
புலவர் படிப்புக்கான தேர்வு எழுதி, 1951-ல் சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றார். அதுவரை முழுமையாக கிடைக்கப்பெறாத குண்டலகேசி காப்பியத்தை தனது கற்பனையில் விரித்து எழுதி முடித்தார். அந்நூலினை 1958-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார். 1963-ல் எழுதிய திருக்குறள் கட்டுரை தொகுப்பு நூலை பிரதமர் நேரு வெளியிட்டார்.
காரைக்குடியில், சங்க இலக்கிய நூல்களைத் தொகுத்தபோது புறநானூற்றை எளிய தமிழில் 2003-ல் வெளியிட்டார். திருச்சியில் திருவள்ளுவர் தவச்சாலையில் 45,000 நூல்கள் கொண்ட நூலகத்தை நடத்தினார்.
பிற்காலத்தில் அதில் 40 ஆயிரம் நூல்களை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்துக்கு நன்கொடையாக வழங்கினார். கண்பார்வை பறிபோய்விட்டால் எழுத்துப் பணி பாதிக்கப்பட்டுவிடும் என்பதற்காக கண்களை மூடியே எழுதும் திறனை வளர்த்துக்கொண்டார். 1978-ல்நல்லாசிரியர் விருது பெற்ற இவர் 2021 ஜூலை 25-ம் தேதி காலமானார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 mins ago
விளையாட்டு
15 mins ago
விளையாட்டு
18 mins ago
விளையாட்டு
31 mins ago
இந்தியா
35 mins ago
இந்தியா
42 mins ago
இந்தியா
49 mins ago
இந்தியா
56 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
7 hours ago
க்ரைம்
8 hours ago