தினசரி வாழ்க்கையில் அளவீட்டியல் ஒன்றற கலந்துள்ளது. காலை முதல் இரவு வரையில் கணிதத்தைப் பயன்படுத்தாமல் நாமில்லை. அதிலும் நிச்சயமாக அளவீட்டியல் கலந்தே இருக்கும். எதை எல்லாம் அளக்கின்றோம்? நேரம், தூரம், கனம், பரப்பளவு, கொள்ளளவு, கோணம் போன்றவற்றை அன்றாடம் பயன்படுத்துகின்றோம். கண் விழித்ததும் அல்லது விழிக்கவும் நேரம் தேவை. காலை எழுந்ததும் காபி, டீ, பூஸ்ட், ஹார்லிக்ஸ் என எதனைப் பருகினாலும் பால் தேவை. தேவையான பாலை கொள்ளளவு கொண்டே வாங்க வேண்டும். பள்ளிக்குச் செல்ல வேண்டுமெனில் எவ்வளவு தூரம், எதில் பயணம் செய்யப் போகின்றோமோ (சைக்கிள், நடை, வண்டி, பேருந்து, ஆட்டோ) அதற்கு ஏற்றார்போல நேரம் எல்லாம் அடங்கும். யோசித்துப் பாருங்கள் ஒவ்வொரு செயலிலும் அளவீட்டியல் கலந்திருக்கும். எவ்வளவு? என்ற கேள்விக்குப் பதில் அளவிடுதலே.
எண்ணும் அலகும்: அளவிடுதலில் இரண்டு பகுதி உண்டு. எண்களும் அலகுகளும். இவை இரண்டில் எது இல்லை என்றாலும் அளவிடுதலே அர்த்த மில்லாமல் போகும். பள்ளிக்கு எவ்வளவு தூரம் என்ற கேள்விக்கு 10 என்று பதில் வருகின்றது. அதை வைத்து என்ன ஊகிக்க இயலும்? 10 மீட்டர் தொலைவிலா? 10 கிலோமீட்டர் தொலைவிலா? 10 நிமிட நடையா? 10 நிமிட சைக்கிள் பயணமா? 10 நிறுத்தங்களா? 10 தெரு தள்ளியா? 10 கட்டிடங்கள் தள்ளியா? இப்படி நிறைய குழப்பம் வந்துவிடும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
இந்தியா
33 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
45 mins ago
சினிமா
30 mins ago
உலகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
விளையாட்டு
55 mins ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago