மாறட்டும் கல்விமுறை - 25: விடை தேடும் வினாக்கள்

By ஜி. ராஜேந்திரன் 

பாடப்புத்தகக் குழுவில் பங்கெடுத்து, மாநிலப் பயிற்சிகளில் கலந்துகொண்டு, பயிற்சியாளராகச் செயல்பட்டு மீண்டும் நான் பள்ளிக்கே பணிபுரிய வந்த காலம் அது. குழந்தைகளின் இயல்புகளுக்கேற்ப நடந்துகொள்ள வேண்டும். அவர்களிடம் அன்பாகப் பழக வேண்டும். அவர்களிடம் கருத்துகள் கேட்க வேண்டும்... போன்ற சிந்தனையில் நம்பிக்கை வைத்து என் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள முயன்றேன். பல வருடங்களுக்குப் பிறகு ஏழாம் வகுப்பில் தமிழ் கற்பிக்க வேண்டும். ஜூன் மாதம் முதல் நாள் பள்ளி திறந்தது. என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர்களைப் பற்றி விசாரித்தேன். தேவையான குறிப்பேடுகளின் தகவல்கள் கூறினேன். இரண்டாம் நாள் மாணவர்களின் பெயர்கள் எழுதிய தாள் என் கையில் இருந்தது.

ஒவ்வொரு பெயருக்கும் நேராக மோசம், பரவாயில்லை, சிறப்பு என்ற தலைப்பில் மூன்று கட்டங்களும் வரைந்து வைத்திருந்தேன். மாணவர்களுடைய வாசிப்புத் திறனை அளப்பதே என் நோக்கம். பாடப்புத்தகத்தின் ஏதாவது ஒரு பக்கத்தை எடுத்து ஏதேனும் ஒரு பத்தியை வாசிக்கச் சொன்னேன். அதைக்கேட்டு... எங்களையெல்லாம் வாசிக்கச் சொல்கிறாயே! உனக்கென்ன பைத்தியமா? என்று கேட்பது போலிருந்தது அவர்களின் பார்வை. முப்பத்தியெட்டு பேரில் ஐந்தோ ஆறோ பேரைத் தவிர மீதியுள்ளவர்கள் வாசிக்க மிகவும் சிரமப்பட்டார்கள். நான் வேறு வகுப்புகளில் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்தேன். கரும்பலகையில் எழுதியவற்றை பார்த்து ஒரு குழந்தை ஒவ்வொரு எழுத்தாக வாசிக்க, வகுப்பிலுள்ள மொத்தக் குழந்தைகளும் அந்த எழுத்தை உரக்கக் கூவிக்கொண்டிருந்தார்கள். ஐந்தாம் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் இதே வேலைதான் நடந்துகொண்டிருந்தது. சென்ற வருடமும் ஜூன் மாதத்தில் இந்தச் செயல்பாட்டை நடத்தியிருப்பார்களே. அப்படியானால் அது பயனளிக்கவில்லை என்றுதானே பொருள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

36 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

53 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்