புதுமை புகுத்து - 10: புற்றுநோய் வராமல் தடுக்கும் வைரம்

By த.வி.வெங்கடேஸ்வரன்

வைரத்தை வைத்து மூக்குத்தி, மோதிரம் என வியாபாரிகள் நகைகள் செய்து கொண்டிருக்கும்போது, வைரத்தால் நுண் காந்த சென்சார் (sensor) வடிவமைத்திருக்கிறார்கள் ஜெர்மனியில் உள்ள மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள். வைரத்தாலான சென்சாரை வைத்து உருவாக்கப்பட்ட எம்ஆர்ஐ கருவி கொண்டு உயிரினங்களின் செல்களின் உள்ளே நடைபெறும் இயக்கத்தை காணும் திறன் கொண்ட இமேஜி தொழில்நுட்பத்தை இந்த விஞ்ஞானிகள் உருவாக்கியதில்தான் அவர்களது முழு சாதனை அடங்கியுள்ளது. புற்றுநோய் உருவாகும் செல்களில் நுண்ணிய அளவில் மாற்றங்கள் ஏற்படும். அத்தகைய நுண்ணிய இயக்கங்களை காண இந்த அதிநவீன தொழில்நுட்பம் வழிவகை செய்யும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

செல்க்குள் நடப்பதென்ன? - ஹைட்ரஜன் அணுவின் கருவின் உள்ளே ஒரே ஒரு புரோட்டான் உள்ளது. நேர் மின்னேற்றம் கொண்ட அந்த புரோட்டானுக்கு சுழலும் பண்பு உள்ளது. பூமி தன்னை தானே சுற்றுவது போல இந்த புரோட்டான் தன்னை தானே சுற்றிவருகிறது என எளிமையாக கற்பனை செய்து கொள்ளலாம். மின்னேற்றம் (electric charge) கொண்ட பொருள் தன்னை தானே சுழலும்போது காந்த புலம் உருவாகும். அதாவது ஹைட்ரஜன் அணுவின் கரு மிக நுண்ணிய காந்தம் போல செயல்படும். சுழல்அச்சு திசையில் அந்த காந்தத்தின் வடக்கு தெற்கு முனை அமையும். இயல்பு நிலையில் ஒவ்வொரு அணுவின் காந்த புலமும் ஒன்றை ஒன்று சமன் செய்துவிடும். குறிப்பிட்ட திசையில் வடக்கு முனை கொண்ட ஒரு ஹைட்ரஜன் அணு கரு இருந்தால் அதற்கு நேரெதிர் திசையில் வடக்கு முனை கொண்ட ஹைட்ரஜன் அணுக்கரு இருக்கும். எனவே இயல்பு நிலையில் மொத்தமாக பார்க்கும்போது காந்த புலம் ஏதும் இருக்காது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

சினிமா

36 mins ago

சுற்றுச்சூழல்

30 mins ago

தமிழகம்

50 mins ago

ஆன்மிகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்