பசுமை நண்பர்கள் சார்பில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

ராமேசுவரம்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திருச்செங்கோடு பசுமை நண்பர்கள் குழு சார்பில் மூன்றாவது ஆண்டாகமாணவர்களுக்கு ஓவியப்போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை கி.தமிழரசி தலைமை தாங்கினார். பசுமையைப் போற்றும் வகையில் முதல்மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மழைநீர் சேகரிப்பு, எனது பள்ளி, தூய்மை இந்தியா ஆகிய தலைப்புகளிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை என்னைக் கவர்ந்த தலைவர்கள் மற்றும் பசுமையைக் காப்போம் எனும் தலைப்புகளிலும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பசுமைநண்பர்கள் குழு சார்பில்சான்றிதழ்களும் பதக்கங்களும்வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை பள்ளி ஆசிரியர் ஜோ. செந்தில்நாதன் ஒருங்கிணைத்தார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள் பானுமதி, நெய்னா முகம்மது, ராஜ்குமார், சீனி இபுராஹிம், நோவா ஐஸ்டன், சாந்தி, மரியராணி ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிறைவாக, ஆசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE