கோவை: கோவையில் இருந்து விமானம் மூலம் காசி, அலகாபாத், கயா சுற்றுலா செல்வதற்கான முன்பதிவை ஐஆர்சிடிசி தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) வெளியிட்ட செய்திக் குறிப்பு: "சிறப்பு ரயில் மூலம் சுற்றுலா, கல்விச் சுற்றுலா, விமான பயணத் திட்டங்களுக்கு ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்து வருகிறது.
வரும் ஏப்ரல் 27-ம் தேதி கோவையில் இருந்து விமானம் மூலம் புதுப்பொலிவூட்டப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில், அன்னபூரணி கோயில், காசி விசா லாட்சி கோயில், காலபைரவர் கோயில், சாரநாத், கங்கா ஆர்த்தி, அலகாபாத் திரிவேணி சங்கமம், பாதாள அனுமன் கோயில், அலகாபாத் கோட்டை, புத்தகயாவில் அமைந்துள்ள புத்தர் சிலை, மகாபோதி கோயில், கயாவில் அமைந்துள்ள விஷ்ணு பாத கோயில் போன்ற இடங்களை காண ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது. இந்த சுற்றுலாவுக்கு ரூ.37,350 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், விமானக் கட்டணம், ஏசி ஓட்டலில் தங்கும் வசதி, ஏசி வாகன வசதி, காலை, இரவு உணவு ஆகியவை அடங்கும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள் எல்டிசி சலுகைகளை பெறலாம். இந்த சுற்றுலா தொடர்பான கூடுதல் விவரங்கள் பெறவும், முன்பதிவுக்கும் ஐஆர்சிடிசி கோவை அலுவலகத்தை 90031 40655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.irctctourism.com என்ற இணையதளத்தில் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
சினிமா
28 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
12 mins ago
ஓடிடி களம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
2 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago