மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த - நிபுணர் குழு அமைக்க உத்தரவு :

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த நிபுணர்குழு அமைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் சம்பள விகிதம், புதியஓய்வூதியத் திட்டம் தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி, பள்ளிக்கல்வித் துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான வழக்கு விசாரணை, நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்செல்வி அமர்வில்விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன் ஆஜரானார்.

‘‘அரசுப் பள்ளிகளை அருகில் உள்ள தொழில் நிறுவனங்கள் தத்தெடுத்து, உள்கட்டமைப்பை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்’’ என மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் வலியுறுத்தினார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் நிபுணர் குழுஅமைக்க வேண்டும். அரசுப் பள்ளிகளை அருகில் உள்ள தொழில் நிறுவனங்கள் தத்தெடுப்பது குறித்தும் கல்வித் துறை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டுவிசாரணையை தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE