நாமக்கல் மாவட்டத்தில் திருடுபோன ரூ.32 லட்சம் மதிப்பிலான 160 செல்போன்களை தனிப்படை போலீஸார் மீட்டு உரியவர்களிடம் வழங்கினர்.
நாமக்கல் மாவட்டத்தில் திருடுபோன செல்போன்களை மீட்க எஸ்பி சரோஜ்குமார் டாகுர் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் குற்றப்பிரிவு கூடுதல் எஸ்பி செல்லபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி ரூ. 32 லட்சம் மதிப்பிலான 160 செல்போன்களை மீட்டனர். மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் எஸ்பி சரோஜ்குமார் டாகுர் வழங்கினார். கடந்த செப்டம்பர் மாதம் தனிப்படை போலீஸார் 301 செல்போன்களை மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குட்கா பறிமுதல்
மேலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து குட்கா கடத்தி வந்த திருச்சி உன்னியூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் தமிழ்வாணன் (38), திருவண்ணாமலை தண்டாராம்பட்டைச் சேர்ந்த சுரேஷ் (38) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு லாரிகளை பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
10 mins ago
வாழ்வியல்
15 mins ago
ஜோதிடம்
41 mins ago
க்ரைம்
31 mins ago
இந்தியா
45 mins ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
2 hours ago