கடலூர் மாவட்டத்தில் - மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆட்சியர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் கன மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேற்று மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர் மழையின் காரணமாக பரங்கிப்பேட்டை ஊராட்சிஒன்றியம் பூவாலை பகுதியில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பார்வையிட்டு பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.தொடர்ந்து மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம் புவனகிரி - சாத்தப்பாடி நெடுஞ்சாலையில் உள்ள பெரிய ஏரி வடிகால் தரைப்பாலம் கனமழையினால் சேதமடைந்துள்ளதை பார்வை யிட்டு போக்குவரத்திற்கு

இடையூறு ஏற்படாமல் நடவடிக்கை மேற்கொள்ள நெடுஞ்சாலை துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் கல்குணம் பகுதியில் செங்கால் ஓடை குறுக்கே அமைந்துள்ள கல்குணம் - திருவெண்ணைநல்லூர் இணைப்பு தலைப்பாலம் சேதமடைந்துள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

விளையாட்டு

43 mins ago

க்ரைம்

47 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்