ஊராட்சிக் குழு உறுப்பினர் திமுக வேட்பாளர் வெற்றி :

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழுவின் 18-வது வார்டு உறுப்பினராக திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழுவின் 18-வது வார்டு உறுப்பினர் பதவி காலியாக இருந்தது. எனவே, அண்மையில் இந்த உள்ளாட்சிப் பதவியிடத்துக்கு இடைத் தேர்தல் நடத்தப் பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நேற்று முன் தினம் மேற்கொள்ளப்பட்டது. தேர்தலில் 8 வேட்பாளர்கள் போட்டி யிட்டனர்.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் இருந்தே திமுக வேட்பாளர் தா.லதா முன்னிலை பெற்று வந்தார். இந்நிலையில், 12 சுற்றுகளின் முடிவில் திமுக வேட்பாளர் 18 ஆயிரத்து 780 வாக்குகள் பெற்று 5911 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதிமுக வேட்பாளர் தீ.கண்ணன் 12 ஆயிரத்து 869 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். பாமக வேட்பாளர் தீ.காந்த் 1883 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் ரா.சசிக்குமார் 426 வாக்குகளும் பெற்றனர். திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அக்கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE