வாழ்வாதாரத்துக்கு உதவி கேட்டு கரூர் ஆட்சியரிடம் பெண் மனு :

By செய்திப்பிரிவு

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கரூரை அடுத்த தாந்தோன்றிமலை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த செல்வராணி, ஆட்சியர் த.பிரபுசங்கரிடம் அளித்த மனு:

எனது கணவர் மாணிக்கம் கரூர்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை சின்னமநாயக்கன்பட்டி பிரிவில் கரும்பு ஜூஸ் கடை வைத்திருந்தார். இவர், கடந்த செப்.19-ம் தேதி தனது கடை முன்பு நின்று கொண்டிருந்தபோது அதிவேக மாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்தார்.

அவர் இறந்ததால், வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாமல், எனது 3 பெண் குழந்தைகளுடன் உறவினர் வீட்டில் தங்கியுள்ளேன். வருமானம் இல்லாததால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறோம். எனவே, எனது குடும்பத்துக்கு உரிய உதவி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

உலகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்