சின்னசேலம் அருகே அரசு பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் இசைக் கல்லூரி மாணவர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர்
சென்னையில் இருந்து சேலம் நோக்கி வாடகை காரில் தனியார் இசை கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஆஷிக் என்பவர் நேற்று மதியம் சென்று கொண்டிருந்தார். கள்ளக்குறிச்சி அருகே உள்ள சின்னசேலம் புறவழிச்சாலையில் வந்த போது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில், வாடகை கார் ஓட்டுநர் முருகன் மற்றும் காரில் பயணம் செய்த இசைக் கல்லூரி மாணவர் ஆஷிக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகே இருந்த ஏரியில் புகுந்ததால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு பேருந்தை விட்டு இறங்கி ஓடினர். அவர்கள் பெரிய அளவில் காயங்கள் ஏதுமின்றி தப்பினர்.
உயிரிழந்த இருவரின் உடலை மீட்ட சின்னசேலம் போலீஸார், கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
5 hours ago
வாழ்வியல்
6 hours ago
தமிழகம்
6 hours ago
ஆன்மிகம்
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago