பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தழுதாளை கிராமம் காந்தி நகரைச் சேர்ந்தவர் முத்துசாமி மனைவி மீனாட்சி (65). இவர் கடந்த மார்ச் 27 அன்று மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து அரும்பாவூர் போலீஸார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில், அரும்பாவூர் வள்ளலார் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் சுசீந்திரன்(39) என்ற அரசுப் பேருந்து ஓட்டுநர், பணத் தகராறில் மீனாட்சியின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி மூச்சுத் திணறச் செய்து கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, சுசீந்திரனை போலீஸார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
21 mins ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
3 hours ago