Regional03

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மே 14-ல் ஊரடங்கில் தளர்வு அளிக்க கோரிக்கை :

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, நாளை(மே 10) முதல் மே 24-ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சிறுபான்மை பாதுகாப்பு இயக்க மாநிலத் தலைவரும், நாகூர் தர்கா ஆதீனஸ்தர்கள் சங்கத் தலைவருமான தமீம் அன்சாரி சாஹிப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

தங்களின் 5 கடமைகளில் 3-வது கடமையான நோன்பை கடைபிடித்து வரும் முஸ்லிம்கள், மே 14-ம் தேதி அன்று ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாட ஏதுவாக, அன்றைய தினம் காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை ஊரடங்கில் தளர்வு அளிக்க வேண்டும். மேலும், ரம்ஜான் நாளில் முஸ்லிம்கள் தங்களின் தலையாய கடமையை நிறைவேற்ற, கடைவீதிகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் வகையிலும் தளர்வு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT