Regional03

கனடா பல்கலைக்கழகத்தில் - தமிழ் இருக்கை அமைய திமுக ரூ. 10 லட்சம் நிதி : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செய்திப்பிரிவு

கனடா நாட்டில் உள்ள ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய திமுகசார்பில் ரூ. 10 லட்சம் நிதி வழங்கப்படும் எனறு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

அன்னைத் தமிழ்மொழிக்கு உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் 'தமிழ் இருக்கை' அமைக்கப்பட்டு, ஆங்காங்கு வாழும் தமிழர்கள் மொழித் தொண்டாற்றி வருகிறார்கள். அவர்களின் சீரிய முயற்சிக்கு திமுக தொடர்ந்துநிதியுதவி அளித்து, தமிழ்மொழியின் புகழும் பெருமையும் உலகெங்கும் பரவிடத் தொய்வின்றி பணியாற்றி வருகிறது.

கனடா நாட்டில் உள்ளரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக வேண்டுமென்ற ஆர்வத்தோடு கனடாவாழ் தமிழர்களும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களும் முயற்சி செய்து வருவதாகவும் அதற்கு திமுக சார்பில் நிதியுதவி தந்திட வேண்டுென்றும் கனடியத் தமிழர் பேரவை நிறைவேற்று இயக்குநர் டன்ரன்துரைராஜா கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி, எத்திக்கிலும் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ் மொழிச் சிறப்புக்கும் என்றென்றும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட்டு வரும் திமுக சார்பில், கனடாரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. செம்மொழித் தமிழின் சிறப்பு எங்கெங்கும் பரவட்டும். இளைஞர்களின் தாய்மொழித் தாகத்தைத் தீர்க்கட்டும். இவ்வாறுஸ்டாலின் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT