3 மாதங்களில் 200 பேர் ரத்ததானம் :

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செயல்படும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஜன.4-ம் தேதி ரத்த வங்கி திறக்கப்பட்டது.

இங்கு இதுவரை ரத்த தானம் செய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நேற்று முன்தினம் 200-வது நபராக ரத்ததானம் செய்த கொடையாளருக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் என்.விஜயகுமார் சால்வை அணிவித்து பாராட்டியதுடன், ரத்தக் கொடையாளர்களுக்கும், பணியிலிருந்த மருத்துவர் உள்ளிட்ட குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.

இதில், ரத்த வங்கி மருத்துவர் இவாஞ்சலின், செவிலியர்கள் சிவரஞ்சனி, சித்ரா, ரேவதி, ரத்தக்கொடையாளர் ஒருங்கிணைப்பு மையப் பொறுப்பாளர் செங்குருதி கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

சினிமா

16 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

10 mins ago

சினிமா

21 mins ago

சினிமா

24 mins ago

வலைஞர் பக்கம்

28 mins ago

சினிமா

33 mins ago

சினிமா

38 mins ago

இந்தியா

46 mins ago

க்ரைம்

43 mins ago

இந்தியா

49 mins ago

மேலும்