தேனியில் 2 விசாரணை கைதிகள் தப்பியோட்டம் :

By செய்திப்பிரிவு

தேனி அரசு மருத்துவமனையில் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்த 2 விசாரணைக் கைதிகள் தப்பியோடினர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தேனியில் உள்ள கம்பம் சாலையில் டீ கடை நடத்தி வருபவர் புகழேந்தி. கடந்த 13-ம் தேதி கடைக்கு வந்த அல்லிநகரத்தைச் சேர்ந்த முருகனுக்கும் புகழேந்திக்கும் இடையே டீ டோக்கன் கொடுப் பது குறித்து தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் மோதிக் கொண்டதில் புகழேந்தி, கடை ஊழியர் மணி, முருகன் மற்றும் அவர்களது உறவினர்கள் காயமடைந்தனர். இது தொடர்பாக தேனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருதரப்பிலும் 5 பேரை கைது செய்தனர். இவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் மருத்துவ மனையிலிருந்த புகழேந்தி, மணி ஆகியோர் அங்கிருந்து தப்பினர். இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்