திருப்பத்தூர் அருகே பழமை வாய்ந்த சிவன் கோயில் பூட்டை உடைத்து சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான உண்டியல் காணிக்கை பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பத்துார் மாவட்டம், மாடப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மடவாளம் கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இந்த கோயில் வாரத்துக்கு மூன்று நாட்கள் மட்டுமே திறக்கப்படும். அதேநேரத்தில் முக்கிய நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடை பெறுவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோயில் ஊழியர்கள் வழிபாடு முடிந்து கோயிலை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை கோயிலை திறக்க வந்தபோது, மூலவர் அறையின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு கோயில் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டதில் உண்டி யல் மற்றும் கோயில் பீரோ உடைக் கப்பட்டு அதில் இருந்து சுமார் ரூ.1லட்சம் மதிப்பிலான உண்டியல் காணிக்கை பணம் திருடுப் போனது தெரிந்தது.
மேலும், கோயிலில் பொருத் தப்பட்ட கண்காணிப்பு கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க்கை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இது குறித்து கோயில் நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்துார் கிராமிய காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
55 mins ago
கல்வி
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago