தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வரும் போலீஸாரின் மன அழுத்தத்தைக் குறைத்து, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று போலீஸாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு, ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் அமல்தாஸ் தலைமை வகித்தார். வாகன பிரிவு ஆய்வாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.
யோகா பயிற்சியை பேராசிரியர்கள் உமாசங்கர், பஞ்சாபிகேசன், ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.
இதில், யோகா செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல், மன அழுத்தம் குறைதல் உள்ளிட்ட பல வகை நன்மைகள் கிடைக்கும் என விளக்கம் அளிக்கப்பட்டது.
இப் பயிற்சியில் 4 உதவி ஆய்வாளர்கள் உட்பட 78 போலீஸார் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
17 mins ago
கல்வி
27 mins ago
விளையாட்டு
32 mins ago
தமிழகம்
40 mins ago
விளையாட்டு
53 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
வெற்றிக் கொடி
2 hours ago