காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துள்ள மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 15,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கடந்த நவம்பர் 13-ம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து, நீர்வரத்துக்கு ஏற்ப அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 13,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்துள்ள மழை காரணமாக நேற்று விநாடிக்கு 15,400 கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து மின் நிலையங்கள் வழியாக, விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 400 கனஅடியும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சி-யாகவும் உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
37 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
11 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago