தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் தருமபுரி மண்டலத்துக்கு உட்பட்ட தருமபுரி நகரக் கிளை பணிமனையில் தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பணிமனை வளாகம், சமையலறை, பணியாளர் ஓய்வு அறை, கழிப்பறை உள்ளிட்ட இடங்களில் அவர் ஆய்வு நடத்தினார். ஆய்வுக்கு பின், பணியாளர் ஓய்வு அறையை மேம்படுத்துதல், நவீன கழிப்பறை அமைத்தல், பழுதான பேருந்துகளை முறையாக பராமரித்தல், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் உரிய நேரத்தில் போதுமான பேருந்துகளை இயக்குதல், அனைத்து கிராமங் களுக்கும் போதிய பேருந்துகளை இயக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை செயல்படுத்து மாறு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் எம்எல்ஏ வலியுறுத்தினார்.
ஆய்வின்போது, பாமக மாநில துணைத் தலைவர் சாந்தமூர்த்தி, முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் பெரியசாமி, சண்முகம், மாவட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், ஒன்றியக் குழு தலைவர் சக்திவேல், போக்குவரத்து தொழிற்சங்க மண்டல பொதுச் செயலாளர் ராஜா உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.