திருப்பூர் நொச்சிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். நொச்சிபாளையம் பிரிவில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மளிகைக் கடை நடத்தி வருகிறார். சிகரெட் உள்ளிட்டவற்றை விற்பதற்காக பெட்டிக்கடையையும் அமைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இந்த பெட்டிக்கடைக்கு போதையில் வந்த நபர், ரூ.500-ஐ கொடுத்து சிகரெட் கேட்டுள்ளார். சில்லறை இல்லை என கடை ஊழியர் தெரிவித்ததால், ரூ. 500-க்கும் 10 பாக்கெட் சிகரெட் கொடு என்று கேட்டு அந்நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதைக்கண்ட செந்தில்குமார், அந்நபரை திட்டி விரட்டியுள்ளார். விற்பனையை முடித்துவிட்டு செந்தில்குமார் கடையை பூட்டிச்சென்றார். அப்போது கடையின் ஷட்டரில், பெட்ரோல் மற்றும் பிராந்தியை ஊற்றிய போதை நபர், தீவைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர், விரைந்து வந்து தீயை அணைத்தனர். தகவலின்பேரில், வீரபாண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, போதை நபரை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 mins ago
உலகம்
11 mins ago
இந்தியா
22 mins ago
இந்தியா
55 mins ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago