பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வேலூரில் இந்திய கம்யூ., கட்சியினர் மிதி வண்டி பேரணி நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூ., கட்சி சார்பில் மிதிவண்டி பேரணி நடைபெற்றது. அதன்படி, வேலூரில் வடக்கு காவல் நிலையம் அருகே இருந்து தொடங்கிய பேரணிக்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.லதா தலைமை தாங்கினார். மாநகரச் செயலாளர் ஏழுமலை, மாவட்ட குழு உறுப்பினர் சரோஜா, காவேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியில் பங்கேற்றவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும், விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும் முழக்கமிட்டனர். மிதிவண்டி பேரணி தலைமை தபால் நிலையம் அருகே நிறைவு பெற்றது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
வாழ்வியல்
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
ஓடிடி களம்
10 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago