: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் இலங்கைத் தமிழர் முகாமை சேர்ந்தவர் தர்மலிங்கத்தின் மகன் ஜெயசேகரன் (43). இவரது நண்பர்கள், பெருமாநல்லூர் முட்டியங்கிணறு பகுதியைச் சேர்ந்த முருகேசன் (38), திருநெல்வேலியைச் சேர்ந்த கே.பத்மநாபன் (45). இவர்கள் மூவரும், நேற்று காலை பெருமாநல்லூர் நான்கு சாலை சந்திப்பில் இருந்து ஈரோடு சாலையில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். ஜெயசேகரன் வாகனத்தை ஓட்டினார், மற்ற இருவரும் பின்னால் அமர்ந்து பயணித்தனர்.
முகாமுக்கு செல்வதற்காக ஈரோடு சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது ஈரோட்டில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த தனியார் கூரியர் வாகனம், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில், ஜெயசேகரன் உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயமடைந்தனர்.சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு அருகே பெருமாநல்லூர் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த போலீஸார், உடனடியாக இருவரையும் மீட்டு திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஜெயசேகரனின் உடல், திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பெருமாநல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
சினிமா
7 mins ago
இந்தியா
10 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
23 mins ago
சினிமா
31 mins ago
க்ரைம்
32 mins ago
இந்தியா
37 mins ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
இந்தியா
53 mins ago
தமிழகம்
1 hour ago