இருசக்கர வாகனம் மீது கூரியர் வேன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் இலங்கைத் தமிழர் முகாமை சேர்ந்தவர் தர்மலிங்கத்தின் மகன் ஜெயசேகரன் (43). இவரது நண்பர்கள், பெருமாநல்லூர் முட்டியங்கிணறு பகுதியைச் சேர்ந்த முருகேசன் (38), திருநெல்வேலியைச் சேர்ந்த கே.பத்மநாபன் (45). இவர்கள் மூவரும், நேற்று காலை பெருமாநல்லூர் நான்கு சாலை சந்திப்பில் இருந்து ஈரோடு சாலையில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். ஜெயசேகரன் வாகனத்தை ஓட்டினார், மற்ற இருவரும் பின்னால் அமர்ந்து பயணித்தனர்.

முகாமுக்கு செல்வதற்காக ஈரோடு சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது ஈரோட்டில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த தனியார் கூரியர் வாகனம், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில், ஜெயசேகரன் உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயமடைந்தனர்.சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு அருகே பெருமாநல்லூர் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த போலீஸார், உடனடியாக இருவரையும் மீட்டு திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஜெயசேகரனின் உடல், திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பெருமாநல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

சினிமா

7 mins ago

இந்தியா

10 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

23 mins ago

சினிமா

31 mins ago

க்ரைம்

32 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

மேலும்