முத்துரங்கம் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நாளை தொடக்கம் :

By செய்திப்பிரிவு

வேலூர் முத்துரங்கம் அரசினர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நாளை தொடங்கவுள்ளது என முதல்வர் மலர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நாளை (25-ம் தேதி) தொடங்கவுள்ளது. இதில், நாளை காலை 9.30 மணிக்கு சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. வரும் 26-ம் தேதி காலை 9.30 மணிக்கு அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு 400 முதல் 335 மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

வரும் 31-ம் தேதி காலை 9.30 மணிக்கு கலை, வணிகவியல், வணிக மேலாண்மை பாடப் பிரிவுகளுக்கு 400 முதல் 335 மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

அதேநாள் பிற்பகல் 2.30 மணிக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடப்பிரிவினருக்கான கலந்தாய்வில் தமிழ் பாடத்துக்கு 100 முதல் 90 மதிப்பெண், ஆங்கிலப் பாடத்துக்கு 100 முதல் 80 மதிப்பெண் பெற்றவர்களுக்கு நடைபெறும்’’ என தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்